வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .


பாசமும் காற்றை போல் தான் உணரத்தானே முடியும்

உணர்கின்ற பாசம் வெளிக்காட்டாமல்


எப்படி தெரியும் ..................



இணையில்லா ஒரு சொந்தம் நீ .........


எனக்கு கிடைத்த ஒரு பந்தம் நீ............

மெய்சிலிர்க்கும் உன் பாசம்.......

உன்னால் என்னுள் ஒரு புது வாசம்............

இன்றும் அந்த ஏக்கம் உண்டு !!!!!!!!!!!!

நீ என்னுடன் பிறவா தோழி என்று

கனவில் கூட வந்து நிற்கும் அந்த ஏக்கம்.......

இறைவனை தினமும் வேண்டிகொள்கின்றேன்

பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பிருந்தால்

அத்தனை பிறப்பிலும் நீ என்

கருவறை காதலியாக வேண்டும் என்று வேண்டும் என்று,,,,,,,,,,,,,,

இன்று உனக்கு பிறந்தநாள் எத்தனையோ பிறந்த நாள்கள் என்னை

அறியாமல்

சென்று விட்டன நான் உனக்கு வாழ்த்து சொல்லும் முதல் பிறந்தநாள்

இது ,,,,,,,,,,,,

உனது குழந்தை பருவத்திலும் உனது இந்த பள்ளி பருவத்திலும் நான்

உன்னுடன் இருந்த நாட்கள் அதை எண்ணிவிட முடியும் இருந்தும் சில

மறக்கமுடியாத நினைவுகள் என்னுள் புதைந்து கிடக்கின்றது ........

படிப்பதற்கு பட்டணம் வந்ததால் வாய்ப்பு இல்லாமல் போனது நம்

இருவருக்கும் கிராமம் செல்ல......

உனக்கு நினைவு இருகின்றதா திண்ணையில்

நீ தவழையில் குவளையில் நீர் கொண்டுகுளம் கட்டி நாம் குளித்தது

கதையல்ல நிஜம்,,,,,,,,,,,,,,

பனைஓலையில் கருவேலம் முள் குற்றி காத்தடி செய்து விளையாடியது......

நம் கிராமத்து மண்ணில் ஆலமரத்தடில் ஆக்கிய கூட்டான் சொறு.......

ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரத்தடி எபோதாவது ஊருக்குள் வந்து போகும்

வாகனத்தின் பின்னல் ஓடியது.......

கவலைகள் மறந்து ஆர்பாட்டம் செய்த

அந்தஅழகான நாட்கள் எங்கே,,,,,,,,,,,?

காலம் வேகமாக ஓடிவிட்டது காலம் அது
யார் சொன்னாலும் கேட்பதில்லை
காத்துக்கொண்டு நிற்பதில்லை..............

ஓடிக்கொண்டே இருக்கிறது
ஒரு முடிவில்லா உயரத்தை நோக்கி
நம் அன்பின் அடர்த்தி போல...................

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........


வருடங்கள் சில கடந்து நாம் சந்தித்து கொண்டபோது நீ சொன்னாய் உன்னை எனக்கு தெரியவில்லை என்று ஆம் உன் முகம் என் நினைவில் இல்லை அனல் உன் நினைவுகள் என்னை விட்டு என்றும் நிங்கியது  இல்லை......

எங்கே நான் என்று தேடாதே நான் இன்று.........

உனக்கு முதலில் வாழ்த்துச்
சொல்ல முடியாமல் அழுதுகொண்டே
தேய்ந்து போகும் நிலவாய் நான்..............

இன்றைய முதல் புன்னகையை
உனக்களித்துக் கொண்டே
எழும் சூரியனாய் நான்...........

கண் திறந்ததும்
நீ பார்க்கும் முதல் காட்சியாய் நான்..............

கைகள் பிணைத்து
நீ முறிக்கும் எழில் சோம்பலாய் நான்............

கண்ணாடி முன் நின்று
நீ பார்க்கும் நீயாய் நான்..............

கடவுள் முன் உன்கை சுடும்
கற்பூரத்தின் கதகதப்பாய் நான்...............

உன் சின்னக்கையில்
கசங்கிய மகிழ்ச்சியில்
கைக்குட்டையாய் நான்..............

நீ குடை தொடுமுன்பே
உன் விரல் தொடும்
முதல் துளி மழையாய் நான்.............

நீ புரட்டிய புத்தகத்தின்
மழுங்கிய பக்கங்களின்
மடங்கிய முனைகளாய் நான்............

மொத்தத்தில்
ஒரு உருவம் இல்லா
உருவம் போல் இருப்பேன் நான்............

எங்கும்........

எதிலும்..........

எப்பொழுதும்.................

உன்னுடன்...............

நான்..............

என் அன்பு தங்கைக்கு இல்லை என் ஆசை தோழிக்கு இந்த அண்ணனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்தநாள் உனக்கு மிண்டும் மிண்டும் வர இறைவனை வேண்டுகின்றேன்...............

செவ்வாய், 26 ஜூன், 2012

நட்பு தொடர வேண்டுகிறோம்............


இங்கே நண்பர்களாய் சேர்ந்தோம்
நட்பு என்னும் மூன்றெழுத்தில்.............

முகங்கள் பார்த்ததில்லை
முகவரிகள் தந்ததில்லை............

ஆண் பெண் பேதமில்லை
கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும்
இங்கே குறைவிலை............

நட்பென்னும் அன்பு சிறையில் சிக்கிகொண்டோம்..
கவலைகளை இங்கே மறந்து விட்டோம்................

சோகத்தை சொன்ன உடன் அது மறைந்து போனதேனோ
சந்தோசத்தை சொன்ன உடன் அது பெருகி போனதேனோ இது நட்பில் மட்டும் நடந்திடும் அதிசயமோ...............

நட்புக்குள்ளே பல மாயங்கள் உண்டு
அதை கண்டு கொள்கிறோம் நாமும் இன்று................


சின்ன சின்ன சண்டைகள் போட்டு கொண்டோம்..
செல்ல பெயர்களும் வைத்து கொண்டோம் அன்பாகவும் திட்டிகொண்டோம்....

ஆளுக்கொரு திசைகளில் இருந்தாலும்
நம்மை ஒன்றாய் சேர்த்தது இந்த இணையதளமோ...........

அளவில்லா சந்தோஷம் அடைகிறோம்
ஆனந்தமாய் பறக்கிறோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
களைய வேண்டாம் நம் நட்பு...............

இறைவா இனி வரும் காலங்கள் மட்டும் அல்ல
இனி வரும் ஜென்மங்களிலும் எங்கள்
நட்பு தொடர வேண்டுகிறோம்........................vanam

இரவு வணக்கம்................

நாம் நேரில் பார்த்து உறவுகொண்டாடும் நட்பு என்பது நம் நிழல் போன்றது அது நாம்.வாழ்வின் கடைசி நிமிடம் வரை நாம் முன்னும் பின்னும் வந்துகொண்டிருக்கும்..

நாம் இந்த இணையத்தில் கொண்டாடும் நட்பு என்பது நாம் வாழ்வின் கடைசி உறக்கம் வரை வரும் ஒரு இனிமையான கனவு போன்றது அது நாம் கண்மூடி உறங்கும் போதுமட்டும் வரும் கண்மூடி திறக்கும்போது காணமல் போகும்...

காணமல் போகும் என் கனவுக்கும் என் உறக்கத்தை இனிமையாக்கும் என் கனவுக்கும் இனிய மாலை பொழுதுடன் இனிய இரவு வணக்கங்கள்.......................

வியாழன், 7 ஜூன், 2012

தோழிக்காக............



இவ்வுலகில் எதிர்பார்ப்பில்லாத உறவு ஒன்று இருக்குமானால் அது தாய் உறவு மட்டுமே என்று இருந்தேன்...............

இந்த பிரிவில் உணர்ந்தேன் நம் நட்பில்
உன் அன்பு அதற்க்கு நிகர் என்று ................vanam


ஞாயிறு, 3 ஜூன், 2012

அன்னைக்கு இன்னொரு பெயர்...........


கடவுள் என்ற சொல்லைக்கண்டு பிடித்தவன் யாரென்று
எனக்குத் தெரியாது.....
ஆனால்............
ஆத்திகம் கூறும்கடவுளின் குணமெல்லாம்
அன்னையைத் தவிரயாருக்கும்பொருந்தாது....
எனக்கு மட்டும்தமிழ் அகராதியை
தயாரிக்கும் உரிமை இருந்திருந்தால்.......
அன்னைக்கு இன்னொரு பெயர்
ஆண்டவன் என்று எழுதியிருப்பேன்..........

திங்கள், 9 ஜனவரி, 2012

என் நட்பு....................

நான் உன்னிடம் நட்பு கொண்டிருந்தால் என்னால் உன்னை மறந்து விட 

வய்ப்புக்கள் இருக்கிறது.......... 


உன்னிடம் நட்பு கொண்டது என் இதயம் அதுக்கு துடிக்கத்தான் தெரியும் 

நடிக்க தெரியாது அதனால் என் இதயம் துடிக்கும் வரை உன் நட்பை 

பிடிக்கும்................


உன் நினைவுகளும் உன் நட்பும் என்னக்குள் துடித்து கொண்டிருக்கும் 

துடிப்பாய் நான் வாழும்வரை........

சும்மா எழுதியது......................................


உங்களுக்கு எத்தனை FRIENDS வேண்டுமானாலும் இருக்கலாம்............

ஆனால்.............

யாராவது ஒருவர்தான் ''BEST FRIEND'' இருக்க முடியும் அந்த ''BEST''க்கு நிங்கள்தான் ''BEST''அப்படின்னு சொல்லமுடியாது அவங்களுக்கு வேறொரு ''BEST'' இருக்கலாம்.......................

அதனால உங்கள் ''BEST'' மனதில் நிங்கள் இல்லாமல் இல்லை உங்கள் ''BEST''அவங்க ''BEST'' கிட்டை பேசும்போது அதிகம் உங்களைப் பத்திதான் பேசுவார்கள் இப்ப நிங்க யாரு ''BEST''க்கு ''BEST'' இல்லையா ?.................

உங்களுக்கு ஒரு ''BEST''தான் இருப்பாங்க ஆனால் உங்களை பலர் ''BEST''டா நினைப்பாங்க...............

அதனால நான் இப்ப சொல்வது என்னவென்றால் என்னோட ''BEST''க்கும் அப்புறம் என்னுடைய ''BEST''க்கு 
''BEST''க்கும் என் இனிய மதிய,மாலை வணக்கங்கள்.................

சும்மா சந்தோசமாக இருந்த இப்படித்தான் யோசிக்க தோணுதுங்க :) :)




செவ்வாய், 3 ஜனவரி, 2012

மாற்றமும் மண்டிடும்,,,,,,,,,



வாழ்வில் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது
வாழ்வில் அனைத்திலும் மாற்றங்கள் வரும்,,,,,,,,,,,,,,,,

மாற்றம் அதை மட்டும் மாற்ற முடியாது என்றல்லாம் சொல்வதுண்டு,,,,,,,,,,,,,

இல்லை அந்த மற்றதால் மாற்றமுடியாத ஓர் இடம் உண்டு. அதுதான்,,,,,,,,,,,,,,, 

என் தாய் அவள் என் மிது கொண்டுள்ள அன்பு அவளிடம் வந்தால் அந்த மாற்றமும் மண்டிடும்,,,,,,,,,,,,,

அவள் என் மிது கொண்டுள்ள காதலை என்னால் மாற்ற முடியவில்லை என்று,,,,,,,,,,,,,,,

ஆம் என்னை அடுத்து என் இரண்டு உறவுகளை ஈன்று எடுத்தாள் இருந்தும் நான் இன்று வரை மாற்றம் கண்டது இல்லை,,,,,,,,,,,,,,

அவள் என்னிடம் காட்டும் அன்பாகட்டும் இல்லை காதலாகட்டும் எனக்கு உடம்புககு முடியவில்லை என்றால் அவள் தவிக்கும் தவிப்பாகட்டும்,,,,,,,,,,

எதிலும் துளி மாற்றம் கண்டது இல்லை நான் காண போவதும் இல்லை நான்,,,,,,,,,,,