செவ்வாய், 26 ஜூன், 2012

நட்பு தொடர வேண்டுகிறோம்............


இங்கே நண்பர்களாய் சேர்ந்தோம்
நட்பு என்னும் மூன்றெழுத்தில்.............

முகங்கள் பார்த்ததில்லை
முகவரிகள் தந்ததில்லை............

ஆண் பெண் பேதமில்லை
கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும்
இங்கே குறைவிலை............

நட்பென்னும் அன்பு சிறையில் சிக்கிகொண்டோம்..
கவலைகளை இங்கே மறந்து விட்டோம்................

சோகத்தை சொன்ன உடன் அது மறைந்து போனதேனோ
சந்தோசத்தை சொன்ன உடன் அது பெருகி போனதேனோ இது நட்பில் மட்டும் நடந்திடும் அதிசயமோ...............

நட்புக்குள்ளே பல மாயங்கள் உண்டு
அதை கண்டு கொள்கிறோம் நாமும் இன்று................


சின்ன சின்ன சண்டைகள் போட்டு கொண்டோம்..
செல்ல பெயர்களும் வைத்து கொண்டோம் அன்பாகவும் திட்டிகொண்டோம்....

ஆளுக்கொரு திசைகளில் இருந்தாலும்
நம்மை ஒன்றாய் சேர்த்தது இந்த இணையதளமோ...........

அளவில்லா சந்தோஷம் அடைகிறோம்
ஆனந்தமாய் பறக்கிறோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
களைய வேண்டாம் நம் நட்பு...............

இறைவா இனி வரும் காலங்கள் மட்டும் அல்ல
இனி வரும் ஜென்மங்களிலும் எங்கள்
நட்பு தொடர வேண்டுகிறோம்........................vanam

இரவு வணக்கம்................

நாம் நேரில் பார்த்து உறவுகொண்டாடும் நட்பு என்பது நம் நிழல் போன்றது அது நாம்.வாழ்வின் கடைசி நிமிடம் வரை நாம் முன்னும் பின்னும் வந்துகொண்டிருக்கும்..

நாம் இந்த இணையத்தில் கொண்டாடும் நட்பு என்பது நாம் வாழ்வின் கடைசி உறக்கம் வரை வரும் ஒரு இனிமையான கனவு போன்றது அது நாம் கண்மூடி உறங்கும் போதுமட்டும் வரும் கண்மூடி திறக்கும்போது காணமல் போகும்...

காணமல் போகும் என் கனவுக்கும் என் உறக்கத்தை இனிமையாக்கும் என் கனவுக்கும் இனிய மாலை பொழுதுடன் இனிய இரவு வணக்கங்கள்.......................

வியாழன், 7 ஜூன், 2012

தோழிக்காக............



இவ்வுலகில் எதிர்பார்ப்பில்லாத உறவு ஒன்று இருக்குமானால் அது தாய் உறவு மட்டுமே என்று இருந்தேன்...............

இந்த பிரிவில் உணர்ந்தேன் நம் நட்பில்
உன் அன்பு அதற்க்கு நிகர் என்று ................vanam


ஞாயிறு, 3 ஜூன், 2012

அன்னைக்கு இன்னொரு பெயர்...........


கடவுள் என்ற சொல்லைக்கண்டு பிடித்தவன் யாரென்று
எனக்குத் தெரியாது.....
ஆனால்............
ஆத்திகம் கூறும்கடவுளின் குணமெல்லாம்
அன்னையைத் தவிரயாருக்கும்பொருந்தாது....
எனக்கு மட்டும்தமிழ் அகராதியை
தயாரிக்கும் உரிமை இருந்திருந்தால்.......
அன்னைக்கு இன்னொரு பெயர்
ஆண்டவன் என்று எழுதியிருப்பேன்..........