இங்கே நண்பர்களாய் சேர்ந்தோம்
நட்பு என்னும் மூன்றெழுத்தில்.............
முகங்கள் பார்த்ததில்லை
முகவரிகள் தந்ததில்லை............
ஆண் பெண் பேதமில்லை
கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும்
இங்கே குறைவிலை............
நட்பென்னும் அன்பு சிறையில் சிக்கிகொண்டோம்..
கவலைகளை இங்கே மறந்து விட்டோம்................
சோகத்தை சொன்ன உடன் அது மறைந்து போனதேனோ
சந்தோசத்தை சொன்ன உடன் அது பெருகி போனதேனோ இது நட்பில் மட்டும் நடந்திடும் அதிசயமோ...............
நட்புக்குள்ளே பல மாயங்கள் உண்டு
அதை கண்டு கொள்கிறோம் நாமும் இன்று................
சின்ன சின்ன சண்டைகள் போட்டு கொண்டோம்..
செல்ல பெயர்களும் வைத்து கொண்டோம் அன்பாகவும் திட்டிகொண்டோம்....
ஆளுக்கொரு திசைகளில் இருந்தாலும்
நம்மை ஒன்றாய் சேர்த்தது இந்த இணையதளமோ...........
அளவில்லா சந்தோஷம் அடைகிறோம்
ஆனந்தமாய் பறக்கிறோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
களைய வேண்டாம் நம் நட்பு...............
இறைவா இனி வரும் காலங்கள் மட்டும் அல்ல
இனி வரும் ஜென்மங்களிலும் எங்கள்
நட்பு தொடர வேண்டுகிறோம்........................vanam